குச்சவெளி

இலங்கையில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்பவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைக்காக வாகனங்களில் செல்பவர்களும் கட்டாயம் மாஸ்க் போட வேண்டும். மாஸ்க் இல்லாமல் வெளியில் சென்றாள் அவர்களை திருப்பி அனுப்பும்படி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் சில நேரம் தளர்த்தப்பட்டாலும் அந்த நேரத்திலும் கட்டாயம் மாஸ்க் போடுமாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *