பட்டதாரிகளின் எண்ணிக்கை 45ஆக உயர்த்த கோரிக்கை.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் வயதெல்லையை 45ஆக உயர்த்துமாறு பட்டதாரிகள் தேசிய நிலையம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவைக்கு சேர்த்துக்கொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்துக்கமைய 35வயதுக்குட்பட்டவர்களை இணைத்துக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டிருப்பதை 45வயதாக உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகள் தேசிய நிலையம் நேற்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தின் மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
இத் திட்டத்தின் கீழ் 50,000பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கும் நிலையில் இதனை துரிதமாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

