223 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நாடு திரும்ப முடியாமல் பிலிபைன்சில் சிக்கி இருந்த 223 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் நேற்று (11) இரவு 10.30 க்கு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவ்வாறு வருகை தந்தவர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதுடன், அதன் முடிவுகள் கிடைக்கும் வரை அவர்கள் விமான நிலைய வளாகத்தில் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
