குச்சவெளி

3000 பேருக்கு Job பறிபோனது…ஐரோப்பாவை விட்டும் வெளியேறும் Nissan!

Nissan (நிசான்) நிறுவனம் ஐரோப்பாவை விட்டும் வெளியேற முடிவு செய்திருப்பதால் 3000 பேர் வேலையிழக்கும் அபாய நிலை உருவாகியுள்ளது.

ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான நிசான் (Nissan), ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனாவிலுள்ள தனது ஆலையை மூட முடிவு செய்துள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆலையில் சுமார் 3,000 ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். இவர்கள் தற்போது வேலையிழக்கும் ஆபத்தான நிலை உருவாகியிருப்பது கவலையளிக்கிறது.

ஆலையை தொடர்ந்து இயக்க அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்தும் மூட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக ஸ்பெயின் வெளியுறவுத் துறை அமைச்சர் அரஞ்சா கோன்சலஸ் லயா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ஆசியாவில் தொழிலில் கவனம் செலுத்துவதற்காக (Nissan) நிசான் நிறுவனம் ஸ்பெயினை மட்டுமல்லாமல் ஐரோப்பாவை விட்டே வெளியேற முடிவெடுத்திருப்பது வருத்தமளிக்கிறது. தொழிலை தொடர்ந்து நடத்த அரசு எல்லா வகையிலும் முயற்சி எடுத்தும் இந்த நிலை உருவாகியுள்ளது” என்று தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் கார் உற்பத்தியில் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பார்சிலோனா Nissan நிசான் ஆலையில் உற்பத்தியை நிறுத்துவதாக நிசான் Nissan நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஸ்பெயின் தொழில்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டதாக அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.

கார்களுக்கான தேவை குறைந்துள்ளதாலும், Coronavirus (கொரோனா) கொள்ளை நோய் தாக்கத்தாலும் நிசான் நிறுவனம் 620 கோடி டாலர் நிகர இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக ஐரோப்பாவை விட்டே வெளியேற நிசான் முடிவெடுத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *