AllInternationalIT NewsNews

Facebook ஊழியர்கள் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணியாற்ற திட்டம்

கொரோனா அச்சம் காரணமாக  பெரும்பாலான (IT Companies) தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை (Work from Home) வீடுகளில் இருந்து பணிபுரியுமாறு உத்தரவிட்டுள்ளன. பிரபல சமூக வலைத்தளங்களான ‘பேஸ்புக்’(முகநூல்), டுவிட்டர் ஆகியவையும் உத்தரவிட்டது.

இந்தநிலையில் Corona கொரோனா பரவல் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராமல் இருப்பதால் அமெரிக்காவின் Facebook நிறுவனத்தின் 50% ஊழியர்களை அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வரை வீட்டிலிருந்தே பணியாற்ற அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி  மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்துள்ளார். இதன்படி 48,000க்கும் அதிகமான அந்நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உள்ளனர்.

Corona கொரோனா வைரஸ் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள தங்களின் ஊழியர்களுக்கு ஆயிரம் டாலர் தொகையை போனசாக வழங்க பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Facebook நிறுவனத்தில் நீங்களும் வேலைவாய்ப்பைப் பெற முயட்சி செய்ய முடிந்தால் இப்படியான நெருக்கடியான நிலையில் சிறந்த உதவியாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *