தரம் ஒன்று புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும், நுழைவாயில் திறப்பு விழாவும்!
T/ முஹம்மதியா வித்தியாலயம் இக்பால் நகர் நிலாவெளியில் இன்று தரம் ஒன்று புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பாடசாலை நுழைவாயில் திறப்பு விழாவும் அதிபர் M.A. சலாகுதீன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பிரதிகல்விபணிப்பாளர் M.M. ஹாபிஸ் மரிக்காயரும், சிறப்பு விருந்தினராக அல்ஹாஜ் M.S.M. அபூபக்கர், கெளரவ விருந்தினராக சேவைகால ஆசிரிய ஆலோசகர் M.K. ரியாஸ் ஆகியோரும் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஊர் பிரமுகர்கள் நலன் விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
