பாலித தெவரப்பெரும மரணம்!
முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று உயிரிழந்துள்ளார்.
அவர் தனது 64ஆவது வயதில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலித தெவரப்பெரும களுத்துறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
