News

ஆரம்பக் கல்வி பிரிவுக்கான அலகு திறந்து வைப்பு

இன்று 2024.07.01 கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்தில் ஆரம்பக்கல்வி அபிவிருத்திக்கான அலகு வலயக்கல்விப்பணிப்பாளர் Mrs.ZMM.நளீம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் (க.அ.),உதவிக் கவிப்பணிப்பாளர்கள், இணைப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

“கிண்ணியா வலத்தில் ஆரம்பப் பிரிவைக் கட்டியெழுப்பலின் முதற்கட்டமாக இந்த அலகினை ஆரம்பித்திருக்கின்றோம். இவ்வாறே சாதாரண தரமும் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக ஆசிரிய ஆளணி வளப்பகிர்வினை 3 கோட்டங்களுக்கும் சமப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுத்து வருகிறோம். இதற்காக வலய உத்தியோகத்தர்கள் பூரண ஒத்துழைப்பினை நல்குவீர்கள் என நம்புகிறேன்.” என வலயக்கல்விப் பணிப்பாளர் ஜனாபா: ZMM.நளீம் அவர்கள் இவ்வலகினை ஆரம்பித்து வைத்து, அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *