Breaking NewsTechWorld

ஐபோன் பயனர்களுக்கு $95 வரை இழப்பீடு: ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி முடிவு!

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் உள்ள Siri செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் குறித்து வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், $250 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் மூலம், சுமார் 3.7 கோடி பயனர்கள் பயனடைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

பின்னணி என்ன?

ஆப்பிள் நிறுவனம் தனது விளம்பரங்களில் “மேம்படுத்தப்பட்ட சிரி அம்சங்கள்” (Enhanced Siri features) இருப்பதாகக் கூறி வாடிக்கையாளர்களை ஈர்த்தது. ஆனால், உண்மையில் அந்த அம்சங்கள் அந்தச் சமயத்தில் பயன்பாட்டில் இல்லை என நுகர்வோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்தத் தவறான விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு ஐபோன்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என வழக்குத் தொடரப்பட்டது.

யார் இந்த இழப்பீட்டைப் பெற முடியும்?

இந்தத் திட்டத்தின் கீழ் பின்வரும் ஐபோன் மாடல்களை வாங்கியவர்கள் விண்ணப்பிக்கலாம்:

• iPhone 16 மாடல்கள்

• iPhone 15 Pro

• iPhone 15 Pro Max

(குறிப்பு: ஜூன் 10, 2024 முதல் மார்ச் 29, 2025 வரையான காலப்பகுதியில் வாங்கியிருக்க வேண்டும்)

எவ்வளவு தொகை கிடைக்கும்?

தகுதியுள்ள ஒவ்வொரு சாதனத்திற்கும் ஆரம்பக்கட்டமாக $25 வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை மற்றும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்மானத்தைப் பொறுத்து இந்தத் தொகை $95 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கான பிரத்யேக இணையதளம் இன்னும் சில வாரங்களில் Clarkson Law Firm மூலம் வெளியிடப்படும். தகுதியுள்ள பயனர்களுக்கு மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் அறிவித்தல் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.